ரோஜாவும் மல்லிகையும்

on Thursday, December 4, 2008

செக்கச் சிவந்தவள் நான் செவ்விதழின் தோரணம் நான்
மிக்கக் குளிர்ந்தவள் நான் மேன்மையதின் மேன்மை நான்
ஒற்றை காலவள் நான் ஒய்யார ஆடகி நான்
குற்றை கொடியவள்
நீயெனக்கு நேர்நிகர் தானோ?

சின்னஞ் சிறியவள் நான் சிங்காரச் சிரிப்பவள் நான்
வெண்மை கொண்டவள் நான் வெண்ணிலவின் தோழியும் நான்
பின்னித் தலையில் கொண்டெ திரெதிரே நடைபோட்டால்
உன்னினும் மணப்பவள் நான் உனக்குகீழ் குறைந்தேனோ?

----- தீன தயாளன்