பயங்கரவாதம்

on Sunday, November 2, 2008

தொன்மையான இவ்வுலகினிலே பல
மென்மை சேர்த்திட மாட்டாமல் கருந்
தன்மை உடைய கனலாக உயர்
வன்மை செய்திடல் சரிதானோ !

காட்டுத்தீ போல் பரவிவரும் கொடும்
வேட்டை களங்கள் புகுத்தி வரும்
நாட்டை பொசுக்கும் நாசினியை இனி
வெட்டி எரியும் நாளேதோ !

ஏற்றம் உழுது வாழ்ந்து வந்தோம் உயர்
காற்றை மிதமாய் தாங்கி வந்தோம் பல
பயிர்கள் வளர்ந்த பூமியின் மேலே
உயிர்கள் பறிக்க கிளம்பிவிட்டோம் !

தேவை இதுவல்ல அறிவீரோ உயிர்
சேவை பெரிதென உணர்வீரோ இனி
ஆயுதம் ஏந்திய கையை உதரி
தோழமை சேர்த்திட மாட்டீரோ !

----- தீன தயாளன்

0 comments: